Uncategorized

யாழில் மதுபோதையில் கடமையில் இருந்த அரச பணியாளரின் முகம் சுழிக்க வைக்கும் செயல்!

Published

on

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை – காரைநகர் பாதை சேவையில் அரை நிர்வாணமாக மதுபோதையில் நின்ற அரச பணியாளர் ஒருவர் பொது இடத்தில் அரசாங்க ஊழியரை கொட்டனினால் தாக்கி அட்டகாசம் புரிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்றைய தினம் பிற்பகல் 4.30 மணியளவில் ஊர்காவற்துறையிலிருந்து காரைநகர் நோக்கி பயணிக்கும் பாதையில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த கடல் பாதையில் கடமை நேரத்தில் நின்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) பாதை பணியாளர் ஒருவர் அரை நிர்வாணமாக மது போதையில் நின்று பயணத்தில் இருந்த அரசாங்க ஊழியர்கள் பொதுமக்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் அரச ஊழியர்களுடன் தகாத வார்த்தைகளால் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் கொட்டனினால் ஊழியரை தாக்கியுள்ளார்.  

இதன்போது பிரதேச செயலகம் மற்றும் நீதிமன்றங்களில் பணியாற்றும் பெண்கள் உட்பட பலரும் பாதையில் பயணத்தில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் இடம்பெற்றமை பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயணிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் மது போதையில் இருந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை அரச பணியாளர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version