உலகம்

சண்டைபோட்ட மனைவியை சமாதானப்படுத்த முத்தமிட சென்ற கணவனுக்கு நேர்ந்த விபரீதம்!

Published

on

மனைவியை சமாதானம் செய்ய கணவர் உதடோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த போது நேர்ந்த சம்பவம் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

  ஆந்திர மாநிலம் கர்னுால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாரசாந்த் இவரது மனைவி புஷ்பாவதி. கணவன் – மனைவி இருவருக்கும் அடிக்கடி சிறு சிறு பிரச்சனைகளுக்காக சண்டையிட்டு கொள்வதும், பின்னர் சமாதானமாவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

சமாதானப்படுத்த  முத்தமிட்ட கணவர்

இந்த நிலையில் ஒரு நாள் கணவன் மனைவி இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டு இருக்கிறது. அப்போது திட்டிக் கொண்டிருந்த மனைவியை சமாதானம் செய்வதற்காக கணவர் தாராசந்த் மனைவியை பிடித்து இழுத்து உதட்டில் முத்தம் கொடுத்து உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி புஷ்பாவதி தனது கணவரின் நாக்கை கடித்து நிலையில்   அவரது நாக்கு சிதைந்து தொங்கியது.

மனைவியின் செயலால்  கதறிய தாராசந்த் , வாயில் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துமவமனைக்கு சென்ற சம்பவம் மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனையடுத்து தாராசந் நாக்கில் தையல் போட்ட மருத்துவர்கள் அவருக்கு சிகிற்சையளித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version