உள்ளூர்

யாழில் சகோரனின் முகம் சுழிக்கவைத்த செயல்; சகோதரிகள் பொலிஸில் முறைப்பாடு!

Published

on

யாழில் சகோதரியின் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் தான் வீட்டில் இல்லாத வேளை , வீட்டில் இருந்த தனது நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை(19) முறைப்பாடு செய்திருந்தார்.

களவாடியதை ஒப்புக்கொண்ட சகோதரன்

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , பெண்ணின் சகோதரனை சந்தேகத்தில் கைது செய்து , விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது , சகோதரியின் நகைகளை தான் களவாடியதை ஒப்புக்கொண்ட சகோதரன் அதனை அடகு வைத்து , 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டதாகவும் , தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து சந்தேக நபரிடமிருந்து பணத்தினை பெற்றுக்கொண்ட பொலிஸார் , அடகு வைக்கப்பட்ட நகைகளையும் மீட்டுள்ளனர். மேலும் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version