உள்ளூர்

யாழில் இரவு ஏற்பட்ட பதற்ற நிலை: களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர்!

Published

on

யாழ் நாவாந்துறை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்றைய தினம் இரவு (17-08-2023) ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இருப்பினும், மோதலுக்கான காரணம் என்ன என்பது இதுவரையில் தெரியவரவில்லை.

மேலும், குறித்த பகுதியில் பொதுப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதோடு, போத்தல்கள் உடைக்கப்பட்டு பொதுமக்கள் வீதியில் பயணிக்க முடியாதவாறு பதற்ற நிலை நிலவுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version