உள்ளூர்

யாழ் இராணுவ முகாமில் ஏற்பட்ட சம்பவம்: அவசர சிகிச்சை பிரிவில் பெண் சிப்பாய்!

Published

on

யாழ், வடமராட்சி, பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாமில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கி பெண் இராணுவ அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்றைய தினம் (17-07-2023) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கற்கோவளம் இராணுவ முகாமில் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த பெண் இராணுவ அதிகாரி ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

திருத்த வேலையின் போது இரும்புக் கம்பி தலையில் விழுந்ததில் அவர் படுகாயமடைந்துள்ளது.

இவ்வாறு படுகாயமடைந்தவர் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் மகியங்கணைப் பகுதியை சேர்ந்த 26 வயதான டபிள்யூ. எம் .எஸ் .எம். விஜயசிங்க என்ற இராணுவ அதிகாரி ஆவார்.

பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் அவர் கற்கோவளம் இராணுவ முகாமில் இன்று நண்பகல் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த போது கட்டடத்தில் இருந்த இரும்பு கம்பி அவரின் தலை மீது விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து படுகாயங்களுக்கு உள்ளானவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version