Uncategorized

மன்னம்பிட்டியவில் மேலும் ஒரு விபத்து; இருவர் உயிரிழப்பு!

Published

on

பொலன்னறுவை, மன்னம்பிட்டியவில் மேலும் ஒரு பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

மன்னம்பிட்டி, அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெற்ற இவ் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் நோக்கி பயணித்த பேருந்து

இந்த பேருந்து யாத்திரிகர்களை ஏற்றிக்கொண்டு பாதெனியவிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தி மீது பேருந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில் தலாவ பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 71 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version