உள்ளூர்

கஞ்சா மற்றும் ஹரோயினுடன் 3 பேர் கைது!

Published

on

பொத்துவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் கஞ்சா மற்றும் ஹரோயின் போதைப் பொருளுடன் 3 பேரை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் (04) இன்று கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான இன்று (04) காலை பொத்துவில் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் பொத்துவில் நகர பகுதியில் 26 வயதுடைய ஒருவரை 350 மில்லி கிராம் கஞ்சாவுடனும் சியம்பலாண்டுவ பகுதியை சேர்ந்த 21 வயதுடைய ஒருவரை 200 மில்லி கிராம் கஞ்சாவுடன் கைது செய்தனர்.

அதே வேளை அறுகம்பை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து உல்லை பகுதியிலுள்ள உணவகத்தில் ஹரோயின் போதை பொருளுடன் ஒருவரை கைது செய்து ஒப்படைத்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version