உள்ளூர்
உணவு தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை பரிதாபமாக பலி!
பொகவந்தலாவை பகுதியில் ஒரு வயது குழந்தைக்கு உணவு தொண்டையில் சிக்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
26 வயதான தாய்க்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை பிரிட்வெலி தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகன் அகல்யா (1) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாய் ஒருவர் தனது மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.