உலகம்

புடினை கோபப்படுத்தும் கூலிப்படைகள்; மற்றுமொரு நகரும் வீழ்ந்தது!

Published

on

மொஸ்கோவிற்கும் ரொஸ்டொவ் ஒன் டொன் நகரிற்கும் இடையில் உள்ள வொரோனெஸ் நகரையும் வாக்னர் கூலிப்படையினர் கைப்பற்றியுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

ஹெலிக்கொப்டர்கள் தாக்குதல்

இந்நிலையில் வாக்னர் கூலிப்படைகளின் முன்னேற்த்தை தடுப்பதற்காக அந்த நகரில் உள்ள எண்ணெய் சேமிப்பு குதமொன்றின் மீது ரஸ்ய ஹெலிக்கொப்டர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளன.

இதன்காரணமாக அந்த எண்ணெய் சேமிப்பு குதத்தில் பெரும்தீ மூண்டுள்ளதாக கூறப்படுகின்றது. ரஷ்யாவின் அலிகேட்டர் என அழைக்கப்படும் காமோவ் கா ஹெலிக்கொப்டர்கள் தாக்குதலை மேற்கொள்வதை காண்பிக்கும் படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

அதேவேளை உக்ரைன் போரில் ரஷ்ய படைக்கு ஆதரவாக நின்ற வாக்னர் கூலிப்படையினர் தற்போது ரஷ்ய அரசாங்கத்திற்கு எதிராக கலத்தில் ஈடுபட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version