உள்ளூர்

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை; வேகமாக பரவும் மண்காய்ச்சல்!

Published

on

எலிக்காய்ச்சலுக்கு நிகரான மிலியோடோசிஸ் அல்லது மண் காய்ச்சல் தற்போது நாட்டின் பல மாகாணங்களில் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இனோகா கொரியா,

மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டம், வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்நோய் பதிவாகி வருகின்றது. இந்த நோய் உயிரிழப்பை ஏற்படுத்தும்” என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தற்போதைய மழையுடன் கூடிய காலநிலையுடன் நீர் மற்றும் மண்ணின் ஊடாக பரவும் பக்டீரியாவினால் ஏற்படும் மெலியோடோசிஸ் அல்லது மண் காய்ச்சல் எனப்படும் நோய் பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

பாதங்களில் ஏற்படும் காயங்கள், அழுக்கு நீரைக் குடித்து வாசனை வீசுவது போன்றவற்றின் ஊடாக இந்த பாக்டீரியாக்கள் உட்கொள்வதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version