உள்ளூர்

முல்லைத்தீவில் புதையல் தோண்ட முற்பட்ட மூவர் கைது!

Published

on

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் மூவரை முல்லைத்தீவு பொலிசார் கைதுசெய்துள்ளனர்கள்.

இந்த சம்பவம் நேற்று (19) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் புதையல் தோண்டுவதற்காக சாரய போத்தல்கள் மற்றும் பூசைக்குரிய பொருட்களுடன் மண்வெட்டி, சவல் என்பனவற்றை பயன்படுத்தி பூசை நடத்தி புதையல் தோண்ட முற்பட்டுள்ளனர்.

புதையல் தோண்ட முற்பட்ட சந்தேக நபர்கள் கைது

இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவம் இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு பொலிசார் புதையல் தோண்ட முற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.

அத்துடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பொருட்களையும் மீட்ட பொலிஸார், சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version