உள்ளூர்

பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனை!

Published

on

களுத்துறை பிரதேசத்தில் பிரத்யேக வகுப்புக்குச் செல்லும் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் விற்பனை!

களுத்துறை, கித்துலாவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை, கலமுல்ல பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேக நபர் 1,010 போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்ட நிலையில், சந்தேகநபர் களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version