உள்ளூர்

விமானத்திலேயே உயிரிழந்த இலங்கை பெண்!

Published

on

கட்டாரில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி சேவையை முடித்து விட்டு இலங்கைக்கு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணொருவர் விமானத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்

மொரட்டுவ, கோரல்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய பெண் எனவும் திருமணமாகாதவர் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையம் திங்கட்கிழமை (23) காலை 01.17 மணியளவில் அவர் கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-662 மூலம் கட்டாரின் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் விமானம் இலங்கைக்கு வந்து கொண்டிருந்தபோது இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version